tamilnadu

img

ஜிஎஸ்டியை நீக்கக் கோரி எல்ஐசி முகவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, செப்.26- எல்ஐசி முகவர்களுக்கு ஐஆர்டிஏஐ உயர்த்தி அறிவித்துள்ள கமிசன் விகி தத்தை உடனே அமல்படுத்த வேண்டும். 2014ம் ஆண்டுக்கு பிறகு அறிமுகப் படுத்தப்பட்ட பாலிசிகளின் புதுப் பிக்கும் காலத்தை 5 வருடமாக உட னடியாக உயர்த்த வேண்டும். எல்.ஐ.சி பாலிசிகள் மீதான ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எல்ஐசி முகவர் சங்கம் (லிகாய்) சார்பில் திருச்சி யூனிட் 1 கிளையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு கிளை தலைவர் பூமி நாதன் தலைமை தாங்கினார். செல்வ ராஜ், ஆசீர்வாதம், ஆடிட்டர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி பொதுக் குழு உறுப்பினர் ஜோஸப் பேசினார். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தென் மண்டல குழு உறுப்பினர் பொன்.வேலுச்சாமி பேசினார். துணைத் தலைவர் ராஜசேகர் நன்றி கூறினார்.  இதே போன்று திருவெறும்பூரில் மேற்கு கோட்ட தலைவர் ராஜேந்தி ரன் தலைமையிலும், திருச்சி கன் டோன்மெண்ட்டில் மேற்கு கோட்ட பொதுச்செயலாளர் திருநாவுக்கரசு தலைமையிலும், துறையூரில் அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் தலைமையிலும், கரூரில் மாநிலக்குழு உறுப்பினர் அழகர்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.