தஞ்சாவூர், ஜூலை 8- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் இரண்டாம் கட்டளை கிராமத்தில் கீர்த்தனார் ஆற்றிலிருந்து இரண்டாம் கட்டளை பாசன வாய்க்கால் தலைப்பு தொலைவு தூரம் 3 கி.மீ. வரையிலும், அதன் துணை வாய்க்கால் 5 கி.மீ வரையிலும் ரூ.8.50 லட்சம் மதிப்பில் இரண்டாம் கட்டளை பாசன வாய்க்கால் விவசாயிகள் சங்கம் மூலம் தூர்வா ரப்பட்டு வருகிறது. அதை ஆட்சியர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து கரைகளில் மண் சரியா வண்ணம் மண் அணைத்திடவும் தூர்வாரும் பணி களை விரைவாக முடித்திடவும் அறிவுறுத்தினார். ஆய்வில் கும்பகோணம் கோட்டாட்சியர் வீராசாமி, வேளாண் துணை இயக்குநர் ஜஸ்டின் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.