tamilnadu

கரூர் எஸ்பி திடீர் இடமாற்றம்

கரூர், மே 11- கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய ராஜசேகரன் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக சென்னை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆட்டோமேஷன் மற்றும் கணினி மயமாக்கல் பிரிவில் எஸ்பியாக இருந்த விக்ரமன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி இடைத்தேர்தல் நடக்க உள்ள நிலையில் திடீரென எஸ்பி இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.