காவிரி, அமராவதி ஆற்றில் மணல் அள்ள அனுமதி வழங்குக!
கரூர் ஆட்சியரிடம் மனு
கரூர், ஜூன் 12- திருச்சியைப் போல காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டு வண்டியில் ரசீது முறையில் மணல் அள்ள அனுமதிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.அன்பழகனிடம் முன்னாள் அமைச்சரும், அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவுமான வி. செந்தில்பாலாஜி, கரூர் மக்களவை உறுப்பினர் செ.ஜோதி மணி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர். அம்மனுவில், விவசாயம் பொய்த்துவிட்ட நிலையில் கரூர் மாவட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் ஏழை-எளிய மக்கள் காவிரி, அமராவதி ஆறுகளில் மாட்டுவண்டியில் மணல் அள்ளி மாவட்டத்தின் உள்ளூர் கட்டுமானப் பணிக்கு சப்ளை செய்து, ஓரளவு தங்களது குடும்பத்தையும், கால்நடை களையும் பராமரித்து வந்தனர். இந்நிலையில் தற்போது காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் எடுக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இத னால், இத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்ட சுமார் 5 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் நிலை கேள்விக்குறி யாகி உள்ளது. இதுமட்டுமின்றி கட்டுமான தொழிலும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இத்தொழிலை நம்பியுள்ள விவசாயத் தொழிலாளர்களுக்கு காவிரி, அமரா வதி ஆறுகளில் மணல் எடுக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்த ஆட்சியர், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரி வித்தார்.
பச்சைபெருமாள் நல்லூர் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்திடுக!
சீர்காழி, ஜூன் 12- நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகே பச்சைபெரு மாள் நல்லூரிலிருந்து மத்தலமுடையான் கிராமத்திற்குச் செல்லும் 2 கிலோ மீட்டர் தூர தார்ச்சாலை மேம்படுத்தப்பட்டு 10 வருடங்களுக்கு மேலாகிறது. இந்த சாலையை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் சாலையில் போடப்பட்டிருந்த கருங்கல் ஜல்லிகள் பெயர்ந்து மேலே வந்து சிதறிக் கிடக்கின்றன. பச்சைபெருமாள்நல்லூரிலிருந்து அரசாலமங்கலம், ஜீவாநகர் வழியாக மத்தலமுடையான் செல்லும் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். சைக்கிள் மற்றும் மோட்டார் பைக் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இதனால் இரு சக்கர வாகனங்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராகின்றன. சைக்கிளில் செல்லும் மாணவர்கள் கருங்கல், ஜல்லிகள் தடுக்கி கீழே விழுகின்றனர். அப்பகுதி யில் உள்ள கிராம மக்கள் கொள்ளிடம் மற்றும் சீர்காழிக்கு இச்சாலையின் வழியாகத்தான் வரவேண்டும். எனவே இந்த இன்னல்களை தவிர்க்கும் வகையில் பச்சை பெருமாள் நல்லூரிலிருந்து, மத்தலமுடையான் செல்லும் பழுதடைந்த தார்ச்சாலையை மேம்படுத்த அதிகாரிகள் உட னடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோட்டில் நடைபெற்ற 11-வது தேசிய சிலம்ப போட்டி
ஈரோட்டில் நடைபெற்ற 11-வது தேசிய சிலம்ப போட்டியில் இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களிலிருந்து சிலம்ப வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழக அணியின் சார்பாக புதுக்கோட்டை மாவட்ட வீரர்கள் 9 பேர் கலந்து கொண்டதில், 6 பேர் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்ததை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.