tamilnadu

img

மத்திய அரசு 2 மாதங்களுக்கு அளித்த இலவச அரிசி ரேசன் கடைகளில் முழுமையாக வழங்கப்பட்டதா?

நாகப்பட்டினம், ஜூன் 12- கொரோனா காலத்தை முன்னிட்டு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களுக்கு, மத்திய அரசு, தமிழகத்திற்கு, ரேசன் கடைகளில், குடும்ப அட்டை தார்களுக்கு, அட்டையில் குறிப்பிடப் பட்டுள்ள ஒவ்வொரு நபருக்கும் கூடு தலாக 5 கிலோ அரிசி இலவசமாக வழங்கிட அனுமதி வழங்கியது. மத்திய அரசின் அந்த இலவச அரிசி பொது மக்களுக்கு முழுமையாக வழங்கப் பட்டதா என்பது தான் கேள்வி. தமிழகத்தில், வழக்கம் போல் இலவச அரிசி பெறும் குடும்பங்க ளுக்குக் குடும்ப அட்டை மூலம் இலவச அரிசி 20 கிலோ வழங்கப்படுகிறது. மேலும், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் ஏழை எளியவர்களுக்குக் கூடு தலாக 15 கிலோ அரிசி வழங்கப் படுகிறது. இந்தச் சூழ்நிலையில், கொரோ னா ஊரடங்குக் காலம் மார்ச்-25 அன்று துவங்கியது. வேலை, வாழ்வா தாரம் இல்லாமல் பொதுமக்கள் அல்லற் படுகிறார்கள் என்பதை வலியுறுத்தி, அனைத்து அரசியல் கட்சிகளும், மத்திய- மாநில அரசுகள் அரிசி மற்றும் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனப் போராடிக் கேட்டுக் கொண்டன.

இதனால், தமிழக அரசு ரேசன் கடை கள் மூலம் வழக்கம்போல் அளிக்கும் இலவச அரிசியுடன் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் ரூ.1000- நிவார ணமாக அளித்தது. மத்திய அரசு, குடும்ப அட்டையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும் 5 கிலோ அரிசி இலவசமாக அளித்திட அனுமதித்தது. அதாவது ஒரு குடும்ப அட்டையில் 5 நபர்கள் இருந்தால் ஏப்ரல் மாததிற்குக் கூடுத லாக 25 கிலோ அரிசி, அதேபோல், மே மாதத்திற்கு 25 கிலோ அரிசி ஆக மொத்தம் 50 கிலோ அரிசி வழங்கப் பட்டிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசின்  இந்த இலவசத் தொகுப்பு அரிசி, குடும்ப அட்டைதாரர்களுக்கு முறையாக- முழுமையாக வழங்கப் படவில்லை. இதில் மிகப்பெரிய கொள்ளை நடைபெற்றிருக்கிறது. பெரும்பாலும், ரேசன் கடைகளுக்குப் பொருள்கள் வாங்கச் செல்பவர்கள் ஏழை, எளியவர்கள், முழுமையான விவரம் அறியாதவர்களாகவே இருப்பார்கள். 

நாகப்பட்டினம், காடம்பாடிப் பகுதியில் ரேசன் கடையில், மே மாதம், முதல் வாரத்தில் ரேசன் பொருள்கள் வாங்கச் சென்றவர்களுக்கு, மத்திய அரசின் இலவச அரிசியைக்  கேட்ட வர்களுக்கு, “ஏப்ரல் 12 , 15  தேதிக்குப் பின் வாருங்கள் ” எனச் சொல்லி அனுப்பி விட்டார் ரேசன் கடை விற்பனையா ளர். இப்படிச் சொல்லி அனுப்பப் பட்ட வர்கள் பலர் ஏமாற்றப் பட்டுள்ளனர். கொரோனா ஊரடங்கு அச்சத்தில் இருந்த குடும்ப அட்டைதாரர்களுள்  பலர், அடுத்த மாதம் சேர்த்து வாங்கிக் கொள்ளலாம் என நம்பியிருந்தவர்கள், அடுத்தமாதம், அதாவது, ஜூன் மாதம், முதல் வாரத்தில் ரேசன் பொருள்கள் வாங்கச் சென்றவர்களுக்கு ஒரு மாதத் திற்குரிய மத்திய அரசின் இலவச அரிசியே வழங்கப்பட்டது. சென்ற மாத அரியைக் கேட்டதற்கு, “அது ‘லேப்ஸ்’ ஆகிவிட்டது” என்று சொல்லியிருகிறார் ரேசன் கடை விற்பனையாளர். அது எப்படி ‘லாப்ஸ்’ ஆக முடியும்?  அந்த ஒரு மாதத்திற்குரிய மத்தியத்  தொகுப்பு இலவச அரிசி என்ன ஆனது? அரசுக்குத் திருப்பி அனுப்பபட்டதா? அல்லது, மக்களுக்குப் போய்ச் சேர வேண்டிய அந்த இலவச அரிசி ‘கொள்ளை’ போனதா?

    -ந.காவியன்