tamilnadu

இணையதள தொழில்நெறி திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருச்சிராப்பள்ளி, ஜூலை 6- 2020 ஆம் ஆண்டு ஜூலை இரண்டாவது வாரம் 8.7.2020 முதல் 15.7.2020 வரை தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் அனுசரிக்கும் வகையில் வேலைவாய்ப்பு மற்றும் பயி ற்சித்துறை, தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து இணையதளம் வழியாக நடத்துகிறது.  இந்நிகழ்ச்சியில் இணையதளம் வழியாக பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள், மாற்றுத்திறனாளர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும்  மகளிருக்கான திறன் விழிப்புணர்வு தொடர்பான தகவல்கள்  வழங்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரு ப்பமுள்ளவர்கள் tcdonline2020@gmail.com என்ற மின்ன ஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.  மேலும், விவரங்களுக்கு 94990 55902, 0431–2413510 என்ற  தொலைபேசி எண்களையும் தொடர்பு கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்துள்ளார்.

;