tamilnadu

img

வாலாஜா அருகே தீண்டாமைச் சுவர் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கட்டுமானத்தை அகற்ற உத்தரவு

வேலூர், மே 11-காலம் காலமாக தலித் மக்களை ஆதிக்கசக்திகள் அடிமைகளாக நடத்தி வருகின்றன. காலப்போக்கில் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு அதிலிருந்து மீண்டு வந்துக்கொண்டிருக்கின்றனர். இரட்டை குவளை முறை, பொதுக்குளத்தில் நீர் எடுக்க தடை என பல்வேறு வகையில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்கின்றன. அதன் ஒரு பகுதி தான்வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை நகரத்தில்பாக்குப்பேட்டை அம்பேத்கர் நகரில் கட்டப்பட்ட தீண்டாமைச் சுவர்.இங்குள்ள தலித் மக்கள் படவேட்டம்மன் கோவிலை சிறிய அளவில் அமைத்து, வழிபட்டுவந்தனர். கோவிலுக்கு செல்ல தலைமுறைதலைமுறையாக இவர்கள் பயன்படுத்தி வந்தபொதுப்பாதை தற்போது அடைக்கப்பட்டுவிட்டதாகவும் அதனை மீட்டுத்தருமாறும் ஜி.நாகராஜ் என்பவர், கடந்தாண்டு அக்டோபர் மாதம்ராணிப்பேட்டை சாராட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவரிடம் மனு அளித்தார்.இதுகுறித்து வாலாஜா வட்டாட்சியர் பூமா, புலத்தணிக்கை செய்து கடந்தாண்டு நவம்பர் மாதம் 2 ஆம் தேதி உட்கோட்ட நடுவரிடம் அறிக்கை அளித்தார். இந்த கோவில்நிலம் பல ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தின்அனுபவத்தில் உள்ளது என்று அரசு ஆவணங்களை மேற்கோள் காட்டி வட்டாட்சியர் பூமா கூறியுள்ளார். 

ஆலயம் ஆக்கிரமிப்பு

அம்பேத்கர் நகரை சேர்ந்த ஜி.நாகராஜ் கூறுகையில், இந்த பகுதியில் ஆரம்பத்தில் லாரி ஓட்டுநர்கள் லாரியை கழுவவும், அதற்கு பூஜை செய்யவும் இந்த கோயிலை பயன்படுத்தி வந்தனர். பின்னர் லாரி உரிமையாளர்களாக உள்ள சாதி ஆதிக்க சக்தியினர் படிப்படியாக ஆலயத்தை தலித் மக்களிடமிருந்து, பறித்துக்கொண்டனர். சுமார் 150 ஆண்டு காலமாக அம்பேத்கர் நகர் மக்கள் கட்டுப்பாட்டில் இருந்த படவேட்டம்மன் ஆலயத்தை சாதி ஆதிக்க சக்தியினர் முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டபின்னர் தலித் மக்கள் நுழையாத வகையில் அவர்கள் வரும் பாதையில் பெரிய சுவரை எழுப்பினர் என்றார். “இதை கண்டு வெகுண்டெழுந்த தலித் இளைஞர்கள் அந்த சுவரை இடித்துத் தள்ளினர். தலித் மக்களின் கோரிக்கை நியாயமானதுஎன்பதால் இந்த போராட்டத்தில் தலித் மக்கள் பக்கம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நின்றது. சுவரை இடித்து தள்ளியதாக தலித் இளைஞர்கள் மீது பொது சொத்துக்களை சேதப்படுத்தியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கை 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் தேதிசென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் 2012ஆம் ஆண்டு இறுதியில் சுமார் 12 அடி உயரம் 3 அடி அகலம் கொண்ட தீண்டாமைச்சுவரை காவல் துறையின் உதவியுடன் சாதி ஆதிக்க சக்தியினர் மீண்டும் எழுப்பினர்.

நாய்களும் மாடுகளும்

இந்த பிரச்சனை தொடர்பாக அங்கு வசிக்கும் அமுதா என்ற பெண் கூறுகையில்,“ கோவில் தேர் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குள்வருவதில்லை. திருவிழாக் காலங்களில் தலித் மக்கள் கூழ் ஊற்ற தனியாக கொப்பரை வைத்து, அதை பொதுமக்கள் பயன்படுத்த விடாமல், நாய்களுக்கும், மாட்டிற்கும் ஊற்றச்செய்த கொடுமையெல்லாம் பல ஆண்டுகளாக இங்கு நடந்துள்ளது’’ என்றார்.இதையடுத்து அம்பேத்கர் நகர் நாகராஜ் புகார் மனு அளித்தார். அவரது புகார் மனு மீதுநடுவர் நீதிமன்றத்தில் ராணிப்பேட்டை உட்கோட்ட நடுவர் மன்ற நீதிபதி இளம் பகவத் விசாரணை நடத்தினார். அப்போது வாலாஜா வட்டாட்சியர் பூமா தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்தார். அருண்குமார், நாகராஜ் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கறிஞர்கள் வழிகாட்டுதல் படி இந்த வழக்கில் தலித் மக்கள் சார்பில் ரஜினிகாந்த் வாதாடினர். இறுதியாக கடந்த 2 ஆம் தேதி நடுவர் இளம் பகவத்இறுதித் தீர்ப்பை அளித்தார். 

கேட், சுற்றுச் சுவரை அகற்ற உத்தரவு

அதில் நீதிமன்றம் வழங்கியதாக கூறிய பொய்யான ஆணையை கொண்டு “ஆலயநிர்வாகம், 12 அடி உயரம் 3 அடி அகலம்கொண்ட தீண்டாமைச்சுவரை அமைத்துள்ளது. பொது வழியில் கட்டிய தீண்டாமைச் சுவரை அகற்ற சிவில் நீதிமன்றத்தை அணுகி தீர்வு காணவேண்டும். அதுவரை இருதரப்பும் அந்த சுவரை இடிக்கவோ, மேலும் சுவரை எழுப்பவோ கூடாது என்று கூறினார்.கோவிலின் முன்பகுதியில் ஆக்கிரமிப்பு நிலத்தில் கட்டப்பட்ட கேட் மற்றும் சுற்றுச்சுவரை வட்டாட்சியர் அகற்ற வேண்டுமெனவும் அவர் உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவை அமல்படுத்த வட்டாட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

முதல்கட்ட வெற்றி

இந்நிலையில் உட்கோட்ட நடுவர் உத்தரவின்படி வட்டாட்சியர் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்,” என அம்பேத்கர் நகர்பகுதியில் நடைபெற்ற ஊர் கூட்டம் வலியுறுத்தியுள்ளது. இக் கூட்டத்திற்கு நாகராஜ் தலைமை தாங்கினார். சத்தியமூர்த்தி, அமுதா, பத்மா, வினோத், சேட்டு, முனுசாமி, மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் கூட்டத்தில் பேசிய தீண்டாமை ஒழிப்புமுன்னணி மாநிலப்பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் “நாகராஜ் அளித்த புகார்மீது சார் ஆட்சியர் மற்றும் உட்கோட்ட நடுவர்கடந்த 2 ஆம் தேதி இரண்டு உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இத்தீர்ப்பு நமக்கு கிடைத்தமுதல் வெற்றி. அதில், முதல் ஆணையில் பொதுப்பாதை உரிமை குறித்து சிவில் நீதிமன்றத்தில் தீர்த்து கொள்ளவும், 2049/2,2038/1- இல் எவரும் ஏற்கனவே உள்ள கட்டுமானங்களைப் புதிதாக, கட்டவோ, மாற்றவோ, அகற்றவோ, மறைக்கவோசெய்யாமல் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் எனக் கூறியுள்ளார்.

“இரண்டாவது ஆணையில் வாலாஜா வட்டாட்சியர், சர்வே எண் 2038/2, சர்க்கார் நத்தம் காலி, 477.5 சதுர மீட்டர் பரப்பளவுள்ள நிலம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் என்றும் எனவேஉரிய நடைமுறைகளை பின்பற்றி அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்உத்தரவிட்டுள்ளார். இது நமக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றார்.சிபிஎம் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி கூறுகையில், அம்பேத்கர் நகர் மக்கள் எடுக்கும்எல்லா முயற்சிகளுக்கும், கட்சி முழு ஒத்துழைப்பு அளிக்கும் என்றார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.டி. சங்கரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி வேலூர்மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், திருவண்ணாமலை மாவட்டச் செயலாளர் செல்வம்,சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் எல். சி. மணி, வாலாஜா நகரச் செயலாளர் உள்ளிட்ட பலர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். முடிவில் பிரசாத் நன்றி கூறினார். பின்னர் வாலாஜா வட்டாட்சியர் பூமாவை சந்தித்து 2038/2 உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி குறித்து கேட்டறிந்தனர்.