மன்னார்குடி ஆக2- மன்னார்குடி இந்தியன் வங்கி மைக்ரோசைட் கிளை சார்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா மன்னார்குடியில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை இந்தியன் வங்கி கள பொதுமேலாளர் கே.சந்திராரெட்டி தலை மை தாங்கி 150 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த பய னாளிகளுக்கு ரூ.10 கோடி கடனுதவி மற்றும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களுக்கு சுயஉதவிக்குழு உறுப்பி னர்களுக்கு விண்ணப்ப படிவம், இளம் சுயஉதவிக்குழு உறு ப்பினர்களுக்கு சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை வழங்கி சிறப்புரையாற்றினார். விழாவிற்கு இந்தியன் வங்கி திருவாரூர் மண்டல மேலா ளர் என்.ராஜாமணி முன்னிலை வகித்தார். துணை மண்டல மேலாளர் எம்.செல்வநாயகம் வரவேற்புரையாற்றினார். திரு வாரூர் மாவட்ட திட்ட இயக்குநர் டி.ஸ்ரீலேகா வாழ்த்துரை வழங்கினார். மன்னார்குடி மைக்ரோசாட் கிளை மேலாளர் எஸ். விக்னேஷ் நன்றி கூறினார்.