தரங்கம்பாடி, ஜூன் 19- நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரி யில் தமிழறிஞர் சீகன்பால்கு பெயரில் புதிய வகுப்பறை கட்டிடம் புதனன்று திறக்கப்பட்டது. கல்லூரி ஆரம்பிக்கட்ட 47 ஆவது ஆண்டு தினத்தையொட்டி கட்டப்பட்ட கட்டி டத்தை டி.இ.எல்.சி நிர்வாகியும், கல்லூரி தாளாளருமான ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் திறந்து வைத்தார். முதல்வர் ஜீன் ஜார்ஜ், துணை முதல்வர்கள் ஜான்சன் ஜெயக்குமார், ஜோயல் எட்வின்ராஜ், மற்றும் துறைத்தலை வர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் நலன் கருதி சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்கும் இயந்திர பயன்பாட்டையும் நீதிபதி வெங்கட்ராமன் துவக்கி வைத்தார்.