உள்ளாட்சி அமைப்பு வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பான பயிற்சி
தூத்துக்குடி, மே 31- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரித்தல் தொடர்பான பயிற்சி மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) டாக்டர்.மு.வீரப்பன்தலைமையில் நடைபெற்றது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் மாநில தேர்தல் ஆணையத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்கட்டமாக வாக்குச்சாவடி பட்டியல்கள் தயாரிக்கும் பணி முடிந்து பட்டியல்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக சட்டமன்ற வாக்காளர் பட்டியல்களை அடிப்படையாக கொண்டு வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணியினை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னையில் முதன்மை பயிற்சியாளர்களுக்கு தேர்தல் ஆணையத்தால் பயிற்சி வழங்கப்பட்டது.மாவட்ட அளவில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிப்பது தொடர்பாக முதன்மை பயிற்றுநர்களால் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (பொது), தேர்தல் உதவியாளர்கள் மற்றும் கணிணி இயக்குநர்கள் ஆகியோருக்கு பயிற்சி வகுப்பு மாவட்டஆட்சியரகத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் (பொறுப்பு) டாக்டர்.மு.வீரப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) அ.சந்திரசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்(தேர்தல்) பா.பொற்செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மனித உரிமைகள் மீறல் - வன்கொடுமைகள் குறித்து விசாரணை
நாகர்கோவில், மே31-கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் பதிவாகியுள்ள மனித உரிமைகள் மீறல்மற்றும் வன்கொடுமைகள் குறித்தவழக்குகளின் விசாரணை வெள்ளியன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடர்ந்து போராடிவரும் சமூக ஆர்வலர் அக்ரி பரமசிவன்என்பவரை கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வீட்டில் இருந்த போதுவலுக்கட்டாயமாக புதுக்கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமலை, உதவி ஆய்வாளர் மஹாராஜா, வேலாயுத பெருமாள் மற்றும்காவலர்கள் உட்பட 6 பேர் அழைத்துசென்று அடித்து உதைத்து துன்புறுத்தியதாக அவர் மனித உரிமைகள் ஆணையத்திற்கு அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கின் விசாரணை வெள்ளியன்று நடைபெற்றது.இதுகுறித்த விசாரணையை மனிதஉரிமைகள் ஆணையத்தின் தலைவர்சித்தரஞ்சன் மோகன்தாஸ் மேற்கொண்டார். இதில் ஸ்டெர்லைட் வழக்கு மட்டுமல்லாமல் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபர்கள், அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனால் விசாரணை நடைபெற்றுவரும் நாகர்கோவில் அரசினர் விருந்தினர் மாளிகையில் பலத்த காவல் துறைபாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.