புதுப்பட்டினம் ஊராட்சி
துப்புரவு பணியாளர்களுக்கு 3 மாதமாக சம்பளம் இல்லை
சீர்காழி, மே 27-கொள்ளிடம் அருகே புதுப்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு ஊழியர்களுக்கு 3 மாதமாக சம்பளம் வழங்காததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன.நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகேயுள்ள புதுப்பட்டினம் ஊராட்சியில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் ஒரு ஊராட்சி செயலாளர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்தமூன்று மாத காலமாக துப்புரவு பணியாளர்களுக்கு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் மூலம் ஊதியம் வழங்கவில்லை. மூன்று மாத ஊதியத்திற்காக காத்திருந்த துப்புரவு பணியாளர்கள் கடந்த 5 நாட்களாக பணிக்கு செல்லவில்லை. இதனால் புதுப்பட்டினத்தின் முக்கிய இடமான கடைவீதி உள்ளிட்ட இடங்களில் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள்குவிந்து கிடக்கின்றன. இதனால் சுகாதார கேடு ஏற்படுகிறது.இதுகுறித்து புதுப்பட்டினம் வியாபாரிகள் சங்கத் தலைவர் குபேந்திரன் கூறுகையில், துப்புரவு பணியாளர்களுக்கு ஊராட்சி சார்பில் வழங்கப்பட்டு வரும் மிக குறைந்த ஊதியம் கூட அவர்களுக்கு வழங்கவில்லை. இதனால் குப்பைகள் சேகரிக்கப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் குப்பைகளை சேகரித்து உரிய இடங்களில் குவித்துள்ளனர். ஆனால் குப்பைகள் அகற்றப்படாமல் சுகாதாரக் கேட்டிற்கு காரணமாக உள்ளது. எனவே உடனடியாக துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை வழங்கி புதுப்பட்டினம் ஊராட்சியை தூய்மைப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
கடலில் மூழ்கி வாலிபர் சாவு
தூத்துக்குடி, மே 27-தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தைச் சேர்ந்த ராஜா மகன் பிரேம்டன் (19). இவர், ஞாயிறன்று வீட்டை விட்டு வெளியேசென்ற நிலையில், தாளமுத்துநகர் கடற்கரையில் சடலமாககிடப்பதாக தருவைக்குளம் கடலோர பாதுகாப்பு குழுமபோலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்றபோலீசார், பிரேம்டன் சடலத்தை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேம்டன், கடலில் குளித்தபோது தண்ணீரில்மூழ்கி மூச்சுத்திணறி இறந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.