tamilnadu

img

காவல்துறை சார்பில் தலைக்கவசம் வழங்கும் விழா

தஞ்சாவூர் செப்.15- தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை யில் காவல்துறை சார்பில், பத்திரிகையாளர்களுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் ஜெ.லோகநாதன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் முன்னிலை வகித்தார். பட்டுக்கோட்டை காவல் துணைக் கண்காணி ப்பாளர் கணேசமூர்த்தி வரவேற்றார்.  விழாவில், சென்னை பத்திரிகை யாளர்கள் சங்க மாவட்டத்தலைவர் செந்தில்குமார், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர் சங்க தலைவர் ஐ.எம்.ராஜா, கௌரவத் தலைவர் ஏ.கே.வெள்ளிமலை, செயலாளர் எல்.சிவா, சட்ட ஆலோசகர்கள் வழக்கறிஞர்கள் கே.சுமதி, அசோக் ஆகியோர் பேசினர்.  பட்டுக்கோட்டை முன்னாள் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர்.ஜவஹர் பாபு, க்யூன் சிட்டி லயன்ஸ் சங்க தலைவர் பி.ஆர்.முத்துக்குமரன், ஆர்.கணேஷ் கண்ணா, பொருளாளர் சி.நஜி சேத், நிர்வாகிகள் பாலாஜி, ரமேஷ், பொதியப்பன், செந்தில், காவல்துறை ஆய்வாளர்கள் பெரியசாமி(பட்டுக்கோட்டை), ஜெயமோகன் (அதிராம்பட்டினம்) கலந்து கொண்டனர். பத்திரிகையாளர் சங்க பட்டுக்கோட்டை கிளைத் தலைவர் என்.முருகதாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். பிரகாஷ் நன்றி கூறினார். விழாவில் பத்திரிகையாளர்கள், காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு தலைக்கவசம் வழங்கப்பட்டது.