tamilnadu

வாக்குகளை பதிவு செய்த காவலர்கள்

திருவாரூர், ஏப்.12-திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில், நாகை நாடாளுமன்ற தேர்தல் மற்றும் திருவாரூர் சட்டமன்ற இடைத்தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு தபால் வாக்கு பதிவு நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 145 காவலர்களும், திருவாரூர் -366 காவலர், நன்னிலம்- 224 காவலர், மன்னார்குடி- 231 காவலர் என மொத்தம் 966 காவலர்கள் தபால் வாக்கு அளித்ததாக ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

;