திருச்சிராப்பள்ளி, மார்ச் 21- திருச்சி ஆட்சியர் கூட்ட ரங்கில் திங்கள் கிழமை நடை பெறும் மக்கள் குறைதீர் கூட்டம் போன்றவை கொரோ னா வைரஸ் முன்னெச்சரிக் கை தடுப்பு நடவடிக்கையாக 31-ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்படுகிறது. மேலும் ஆட்சியர் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவ லகங்களில் நடைபெறும் ஆதார் சேவை மையம் போன்றவையும் தற்காலிக மாக செயல்படாது. எனவே பொதுமக்கள் தங்கள் அவசர கோரிக்கை கள் இருப்பின் இது குறித்த விவரங்களை CHllrtry@nic.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கோ (WatsÆp) செய்தி மூலமாகவோ 93840-56213 கட்டணமில்லாத தொ லைபேசி எண்: 0431 1077 என்ற எண் மூலமாகவோ அல்லது 0431- 2418995 என்ற தொலை பேசி எண்ணிற்கு தெரிவிக்கு மாறு ஆட்சியர் தெரிவித்துள் ளார். தஞ்சாவூர்: இதே போல் தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவல கத்தில் திங்கட்கிழமை தோ றும் நடைபெறும் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத் துவ மதிப்பீட்டு முகாம் மற்றும் தனித்துவ அடையாள அட்டை வழங்குவதற்கு விண்ணப் பங்கள் பெறும் முகாம் ஆகி யவை மார்ச் 23 முதல் அர சின் மறு உத்தரவு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள் ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.