tamilnadu

img

குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி

புதுக்கோட்டை, ஜூன்.16- புதுக்கோட்டை மன்னர் கல்லூரி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையமும் முன்னாள் மாணவர் சங்கமும் இணைந்து குரூப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சனிக்கிழமை தொடங்கியது. மன்னர் கல்லூரியில் தொடங்கிய பயிற்சி வகுப்பை தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் கவிஞர் நா.முத்துநிலவன் தொடங்கி வைத்து பேசினார்.  முன்னதாக போட்டித் தேர்வு தொடர்பான நூலை பேரா.எஸ்.கணேசன் வழங்கினார். கல்லூரி முன்னாள் பேராசிரியரும் வாசகர் வட்டத் தலைவருமான சா.விஸ்வநாதன், தன்னார்வ பயிலும் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சீனிவாசன், சுரேஷ்குமார், புவனேஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 150-க்கும் மேற்பட்டோர் இப்பயிற்சியில் பங்கேற்றனர். வாராந்தோறும் சனி, ஞாயிறுகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.