தரங்கம்பாடி: நாகை மாவட்டம், ஆக்கூரிலுள்ள ஓரியண்டல் அரபி மேல்நிலைப்பள்ளியில் அரசின் இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை எம்.எல்.ஏ பவுன்ராஜ் வழங்கி உரையாற்றினார். ஆக்கூர் மௌலானா அபுல்கலாம் ஆசாத் கிராம கமிட்டியின் துணைத் தலைவர் ஓ.ஏ.ஏ.முகமது சித்திக் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமையாசிரியர் ஷாஜகான் வரவேற்புரையாற்றினார். ஊராட்சி தலைவர்கள் ஏ.ஆர்.சந்திரமோகன், மெஹராஜ் செல்வநாயகம்(மடப்புரம்), நடராஜன்(காலமநல்லூர்), ஆக்கூர் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர் எம்.ஜி.ராமலிங்கம் மற்றும் மௌலானா அபுல்கலாம் ஆசாத் கிராம கமிட்டியினர் கலந்து கொண்டனர். நிறைவாக ஆசிரியர் தமிழரசன் நன்றி கூறினார்.