tamilnadu

கொரோனா பாதிப்பால் அரியலூரில் முதல் பலி

அரியலூர், ஜூலை 10- அரியலூர் நகர் எம்ஜிஆர் சிலை அருகே பூக்கடை வைத்திருந்த முருகன் (43), உடல் நிலை சரியில்லாததால் திருச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு முடிவு வராத நிலையில் வியாழன் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவருக்கு பரிசோதனை முடிவில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் வசித்த மேலத்தெரு மற்றும் பூக்கடை இருந்த மாங்காய் பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கிருமி நாசினி தெளி க்கப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் முதல் உயிரிழப்பு இதுவாகும்.