tamilnadu

img

மழையால் பயிர்கள், வீடுகள், கால்நடைகள் பாதிப்பு நிவாரணம் வழங்கக் கோரி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம்

மயிலாடுதுறை, ஜன.5 - தொடர் மழையினால் அழிந்து போன பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு  ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண் டும். வேலை இழந்த விவசாயத் தொழி லாளர் குடும்பங்களுக்கு நிவாரண மாக ரூ.10,000 வழங்க வேண்டும்.  2020-21-ல் பிரீமியம் செலுத்தி  விடுபட்ட அனைத்து விவசாயி களுக்கும் பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும். இடிந்து விழும் நிலையில் உள்ள அனைத்து தொ குப்பு வீடுகளையும் புதிதாகக் கட்டிக்  கொடுக்க வேண்டும். கோமாரி நோ யால் இறந்து போன கால்நடை களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் புதன்கிழமை தமிழ்நாடு முழுவதும் காத்திருப்பு போராட்டம் துவங்கியது. அதனொரு பகுதியாக டெல்டா  மாவட்டங்களின் பல்வேறு இடங்க ளில் நடந்த போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்றனர்.

காவல்துறை அடக்குமுறையை மீறி துவங்கிய போராட்டம்

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய  விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்  சார்பில் தொடர் காத்திருப்பு போராட் டம் காவல்துறையின் அடக்குமுறை களையும், அடித்தடியையும் மீறி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  பொதுச் செயலாளர் பெ.சண்முகம், அகில இந்திய விவசாய தொழிலா ளர் சங்க மாநிலத் துணை தலைவர்  ஜி.ஸ்டாலின் ஆகியோர் தலைமை யில் புதனன்று துவங்கியது. கோரிக்கைகளை முழங்கிய வாறு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நீதிமன்ற சாலையிலிருந்து பேரணி யாக புறப்பட்டு பெரிய கண்ணா ரத்தெரு, சின்னக்கடைவீ தி, தரங்கை சாலை, கீழவீதி வழியாக கம்பீர முழக் கங்களுடன் வந்து மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் நோக்கி செல்ல முயன்ற வர்களை டிஎஸ்பி வசுந்தரராஜ் தலை மையிலான 100-க்கும் மேற்பட்ட காவல்படையினர் இரும்பு தடுப்பு களால் தடுத்தும், கயிறுகளால் கட்டியும்  கடுமையாக தாக்கினர். காவல்துறையின் அடாவடியான அடக்குமுறையையும் மீறி ஆட்சியர் அலுவலகம் முன்பு பந்தல் அமைத்து நடைபெற்று வரும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், விவசாய சங்க மாவட்ட தலை வர் டி.சிம்சன், இயற்கை விவசாயி அ. ராமலிங்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  கோரிக்கைகளை நிறைவேற்றும்  வரை எத்தனை நாட்கள் ஆனாலும் இரவு-பகல், மழை, வெயில், பனி எதை யும் பொருட்படுத்தாமல் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநில பொதுச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடந்த போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயத் தொழிலா ளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் கே.பக்கிரிசாமி, தமிழ்நாடு விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன் ஆகியோர் தலைமை வகித்தனர்.  த.வி.ச மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், மாவட்ட பொரு ளாளர் எம்.பழனிஅய்யா, விதொச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு,  மாவட்டப் பொருளாளர் கே.அபிமன்னன் முன்னிலை வகித்தனர்.  அகில இந்திய விவசாயத் தொழி லாளர்கள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான ஏ.லாசர், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் டி.ரவீந்திரன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண் டியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதுவரை நிவாரணம் வழங்கவில்லை: ஏ.லாசர்

முன்னதாக அகில இந்திய  விவசாய தொழிலாளர் சங்க மாநிலத்  தலைவரும், முன்னாள் எம்எல்ஏவு மான லாசர் செய்தியாளர்களிடம் பேசு கையில், “தமிழ்நாடு முழுவதும் சமீ பத்தில் பெய்த கொடும் மழையின் காரணமாக, மிகப்பெரிய சேதம் ஏற்பட்டு,  பல இடங்களில் விவசாயத் தொழிலா ளர்களின் வீடுகள், கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளன.  தமிழகத்தில் டெல்டா மாவட்டங் களில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட் டினம், கடலூர் இந்த 4 மாவட்டங்கள், திருச்சி, புதுக்கோட்டையில் ஒரு  பகுதி என கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்குரிய நிவாரணத்தை  அரசு காலத்தில் வழங்கி இருக்க  வேண்டும். தமிழக அரசு இதுவரை  உரிய நிவாரணத்தை வழங்காத தால், இதற்கான கோரிக்கையை இரண்டு அமைப்புகள் சார்பில் வலியு றுத்தியுள்ளோம். ஒன்றிய அரசும்  இயற்கை பேரிடர் நிதியிலிருந்து தமிழக  அரசுக்கு உரிய நிதியை வழங்க  வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் மூலம் சேத பாதிப்பை பார்வையிட்டு ஆய்வு செய்து அறிக்கை பெற்றதோடு உள்ளது.  இதுவரை நிவாரணம் வழங்கப்பட வில்லை. இதுவரை பட்டியலும் வெளி யிடப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்க ளுக்கு நிவாரணமும் வழங்கப்பட வில்லை.  வெள்ள பாதிப்புக்கு உரிய நிவா ரணம் வழங்க வேண்டுமென தமிழக முதலமைச்சரை ஏற்கனவே சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம். வெள்ள பாதிப்பு குறித்து அரசு ஆய்வு செய்து நிவாரணம் குறித்து அறி விக்க வேண்டும். நெல் பயிர் பாதிப் புக்கு ஏக்கருக்கு 30 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும். அரசிடம் இருந்து இது வரை எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பதால்தான் இந்த போராட்டம் நடைபெறும் சூழல் ஏற்பட்டுள்ளது.  டெல்டா பகுதியில் மைக்ரோ பை னான்ஸ் நிறுவனங்கள் கடன் வழங்கி  விட்டு, விவசாயிகள் கழுத்தை நெறிக் கும் வேலையில் ஈடுபட்டு வருகின்ற னர். இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கஜா  புயலின் போது, நுண்கடன் நிறுவனங் கள் கடன் வசூலிப்பதை நிறுத்தி வைக்க ஆட்சியர் நடவடிக்கை எடுத்தது  போல, தற்போதும் நடவடிக்கை எடுக்க  வேண்டும்” என்றார். 

ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வேண்டும்: டி.ரவீந்திரன்

தமிழ்நாடு விவசாயிகள் சங்க  மாநில துணைத் தலைவர் டி.ரவீந்தி ரன் செய்தியாளர்களிடம் பேசுகை யில், “தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட காவிரி டெல்டாவில் அறுவடைக்கு தயா ராக இருந்த நெற்பயிர், மழை  வெள்ளத்தால் முற்றிலும் சேத மடைந்துள்ளது. விவசாயிகள் செய்த  செலவுக்குக் கூட ஆதாயம் கிடைக் காத அளவில் உள்ளது. தமிழக அரசு  நெற்பயிருக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் அறிவித்தது போதாது. ஏக்க ருக்கு 30,000 வழங்க வேண்டும். இது தான் விவசாயிகள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க உதவும். நெல் தவிர மற்ற பயிர்களும் பாதிக் கப்பட்டுள்ளன. எனவே முறையாக ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் அது நடைபெறவில்லை. நெல் கொள் முதல் நிலையங்களில், விவசாயிகள்  நெல்லை விற்பனை செய்ய ஆன்லைன் பதிவுக்கு நிர்ப்பந்தம் செய்கிறார்கள். இது ஏற்கத்தக்கதல்ல. இது விவசாயிகளுக்கு பல்வேறு இடர்பாடுகளை ஏற்படுத்தும். எனவே பழைய நடைமுறையே தொடர வேண் டும்” என்றார். 

வெயிலில் அமர்ந்து போராட்டம் 

 முன்பு துணிப் பந்தல் அமைக்க காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில், மரக்கிளைகளை நிழ லுக்கு பிடித்தவாறு, பெண்கள் உள்ளிட்ட  ஆயிரக்கணக்கானோர் கொளுத்தும் வெயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திருவாரூர்

திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில  செயலாளர் சாமி.நடராஜன், விவசாய  தொழிலாளர் சங்க மாநில பொருளா ளர் எஸ்.சங்கர் ஆகியோர் தலைமை யில் ஆப்பரக்குடி ஆதியன் குழுவின ரின் மேளதாள நிகழ்ச்சியோடு தொ டங்கியது. சிபிஎம் மாவட்ட செயலா ளர் ஜி.சுந்தரமூர்த்தி போராட்டத்தை துவங்கி வைத்து உரையாற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி.நாகரா ஜன் போராட்டத்தை ஆதரித்து பேசி னார். சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 500-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், விவசாய தொழிலாளிகளும் காத்திருப்பு போ ராட்டத்தில் பங்கேற்றனர். 

நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடக்கும் தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு விச மாநில தலைவர் வி.சுப்பிரமணியன், வி.தொ.ச மாநில துணைத்தலைவர் வசந்தாமணி ஆகியோர் தலைமை வகித்தனர். சிபிஎம் நாகை மாவட்ட செயலாளர் வி.மாரிமுத்து, விச மாவட் டச் செயலாளர் கோவை.சுப்ரமணி யன், வி.தொ.ச மாவட்ட செயலாளர் எம்.முருகையன், தீண்டாமை ஒழிப்பு  முன்னணி மாவட்ட செயலாளர் ப. சுபாஷ்சந்திரபோஸ், மாதர் சங்க  மாவட்ட செயலாளர் டி.லதா, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங் கேற்றனர்.