tamilnadu

img

அரசு வழங்கிய உளுந்து விதை பலன் தரவில்லை : விவசாயிகள் கடும் பாதிப்பு

தஞ்சாவூர் மே.31-தஞ்சை மாவட்டத்தில், கஜா புயலுக்கு பிறகு அரசு வேளாண்மை துறையினரால் மானியத்தில் வழங்கப்பட்ட உளுந்து விதை பயிரிட்டும் பலன் தரவில்லை. எனவே சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர் பட்டுக்கோட்டை எம்.செல்வம் கூறியதாவது, "கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தாக்கி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு தாலுகா பாதிக்கப்பட்டு, தென்னை விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் வீடுகளை இழந்தனர்.மாவட்ட நிர்வாகம் முறையாக கணக்கெ டுப்பு செய்யாமல், ஆளுங்கட்சியின் தலையீ ட்டாலும், அதிகாரிகளின் குளறுபடி யாலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் இதுவரை முறையாக நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்காத ஆயிரக்கணக்கானோர் வட்டாட்சியர் அலுவலகம், வேளாண் துறை அலுவலகம், வங்கிகள் என அலைந்து கொண்டுள்ளனர்.இந்நிலையில் பாதிக்கப்பட்ட பட்டுக்கோ ட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு பகுதி தென்னை விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறையால் ஆடுதுறை 5 என்ற உளுந்து விதை மானிய விலையில் வழங்கப்பட்டது. இதனை விவசாயிகள் வாங்கி விதைத்தார்கள். 60 நாட்கள் ஆகியும் உளுந்து செடியிலிருந்து, பூவும், காயும் இதுவரை வரவில்லை. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டால், முறையான பதில் இல்லை. இதனால் உளுந்து பயிரிட்ட விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விதை நேர்த்தி செய்யாமல், தரக் கட்டுப்பாடு இல்லாத உளுந்து விதைகளை வியாபாரிகளிடம் குறைந்த விலைக்கு வாங்கி விவசாயிகளுக்கு வழங்கி பாதிப்புக்குள்ளாகியுள்ளது.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும், வேளாண் துறை அதிகாரிகளும் உளுந்து பயிர்களை பார்வையிட்டு உடனடியாக நிவாரணமாக ஏக்கருக்கு ரூ 70 ஆயிரம் வீதம் வழங்க வேண்டும் என்றார்.