தஞ்சாவூர் ஜூன்23- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசின் விவசாயிகள் நிதித்திட்டத்தில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. கூடுதல் தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி கலந்து கொண்டு விவசாயிகளிடம் இருந்து மனுக்களை பெற்றார். வருவாய் ஆய்வாளர்கள் அஷ்ரப் அலி, சுப்பிரமணியன், ஜோதி, பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இத்திட்டத்தில் பயன்பெற சிறு, குறு, நடுத்தர விவசாயிகள், 5 ஏக்கருக்கு மேல் நிலம் உள்ளோர், கூட்டுப் பட்டாதாரர்கள், இறந்த பட்டாதாரர்களின் வாரிசுகள், வாரிசு அடிப்படையில் பயனாளிகளைச் சேர்க்கும் பொருட்டு மனுக்கள் பெறுவதற்காக இச்சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.