புதுக்கோட்டை, ஜூலை 8- பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் தங்களது கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளி களின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பக இணைய தளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெறலாம். 2019-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாண வர்களின் மதிப்பெண் சான்றிதழ் 10-ம் தேதி வழங்கப்பட உள்ளதை அடுத்து வரும் 24-ம் தேதி வரை ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணைய தளம் மூலம் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடை பெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் (www.tnvelaivaaippu.gov.in) தங்கள் அளவிலேயே இணையதளத்தில் பதிவு செய்யலாம். அல்லது தங்களது மாவட்டத்திற்குரிய வேலைவாய்ப்பு அலு வலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம் என தெரி விக்கப்படுகிறது.