வேலூர் ஜூன் 30- தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தின் மாவட்ட மாநாடு சத்துவாச்சாரியில் தலை வர் ஜோசப் கென்னடி தலைமையில் நடை பெற்றது. மாநாட்டை அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் க.சரவணராஜ் துவக்கி வைத்தார். செயலா ளர் கே.எம்.நேரு வேலை அறிக்கையையும், பொருளா ளர் பிரபு வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பி த்தனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து ஓய்வூதியர் சங்க மாநில பொதுச் செயலாளர் பா.ரவி, வேலூர் மாவட்ட ஆட்சி யரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மு.சிலுப்பன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டை நிறைவு மாநிலச் செயலாளர் ச.பாரி பேசினார்.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக எஸ்.ஜோசப் கென்னடி, செயலாளராக கே.எம்.நேரு, பொருளாளராக பெரு மாள் உள்ளிட்ட 16 பேர் கொண்ட நிர்வாக்குழு தேர்வு செய்யப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும், துறையில் உள்ள பதவி உயர்வு பணி யிடங்களை காலதாமத மின்றி நிரப்ப வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் இதர அலுவலர்க ளுக்கு நடத்தும் வளர்ச்சிப் பணி மற்றும் ஆய்வுக் கூட்டங்களை போதிய கால அவகாசம் வழங்கி நடத்த வேண்டும். திருப்பத்தூர் வேலூர் அரக்கோணம் ஆகியவற்றை தலைமை யிடமாகக் கொண்டு வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.