tamilnadu

img

பழுதடைந்த கட்டடத்தில் இயங்கும் எலத்தூர் அங்காடி

கொள்ளிடம், ஆக.30- கொள்ளிடம் அருகே எலத்தூர் அங்காடி கட்டட விரிசலை சரி செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே எலத்தூர் கிராமத்தில் நியாய விலை அங்காடி பழமையான கட்டடத்தில் இயங்கி வருகிறது. எலத்தூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த நியாய விலைக் கடையில் 800-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் கட்டடத்தின் சுவர் மற்றும் மேற்கூரை உடைந்த நிலையில் உள்ளதால் மழை நீர் கசிந்து உள்ளே வருகிறது. இதனால் கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் பாதிக்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுக்கும் மேல் பழமை வாய்ந்த கட்டிடத்தில் இயங்கி வரும் அங்காடி கடைக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.