பொன்னமராவதி, செப்.27- தேசிய கல்வி கொள்கையை திரும்பப் பெற வேண்டும். அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டு மூடிய பள்ளிகளை திறக்க வேண்டும், தமிழ்வழிப் பள்ளிகளை அழிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினரின் தமிழகம் முழுவதும் கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் இயக்கம் நடைபெறுகிறது. அதன் ஒருபகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரே நடந்த பிரச்சாரக் கூட்டத்திற்கு வட்டாரச் செயலாளர் சி.மணி குமார் தலைமை வகித்தார் பிரச்சார இயக்கத்தை விளக்கி பொதுச் செயலாளர் ச.மயில் மாநில துணைச் செயலாளர் ஹேமலதா, மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி, மாவட்ட செயலாளர் வின்சென்ட், மாவட்ட தலைவர் ஜீவன் ராஜ், மாவட்ட பொருளாளர் சக்திவேல், கரூர் மாவட்ட செயலாளர் ஜெயராஜ்,கரூர் மாவட்ட பொருளாளர் மோகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, பேச்சியம்மாள் உள்ளிட்டோர் பிரச்சாரத்தை விளக்கிப் பேசினர். வட்டார பொருளாளர் சுப.ஆனந்த் நன்றி கூறினார். முன்னதாக மாவட்டத்தில் உள்ள திருமயம், அரிமளம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வக்கோட்டை ஆகிய இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.