tamilnadu

img

மண் சட்டி, மண் வெட்டி ஏந்தி போராட்டம்

திருத்துறைப்பூண்டி, செப்.13-  கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களுக்கு கொடுக்க வேண்டிய பயிர் இன்சூரன்ஸ் தொகையை கால தாமதமின்றி உடனடியாக வழங்கிட வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியத் தலைவர் என்.வீராச்சாமி தலைமை வகித்தார். வி.ச மாவட்ட தலைவர் எஸ்.தம்புசாமி, ஒன்றிய செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ், வி.ச ஒன்றிய செயலாளர் டி.எஸ்.மணியன் கண்டன உரையாற்றினர். ஒன்றியக்குழு பி.என்.தங்கராசு, ஆர்.வேதையன், ஆர்.மதியழகன், வி.ரவி, எஸ்.பவானி, ஏ.கே.வேலவன், வி.ச ஒன்றியக்குழு எஸ்.பிச்சுமணி, கே.முல்லைவளவன், பி.நாகூரான், நடேசன், எஸ்.நேரு, என்.சுந்தரேசன், எம்.முரளி, எம்.சந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கையில் மண் சட்டி ஏந்தி கொண்டும், மண் வெட்டியோடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல் விவசாயத் தொழிலாளர் சங்க திருத்துறைப்பூண்டி நகரக்குழு சார்பில் திருத்துறைப்பூண்டி கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம், நகரச் செயலாளர் எம்.ஜெயபிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.  வி.ச. ஒன்றியத் தலைவர் டி.வி.பன்னீர்செல்வம், துணை செயலாளர் ஜி.தமிழ்மணி முன்னிலை வகித்தனர். வி.ச மாவட்ட பொருளாளர் எஸ்.சாமிநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் டி.சுப்பிரமணியன், நகர செயலாளர் கே.ஜி.ரகுராமன் கண்டன உரையாற்றினர். நகரக்குழு கு.வேதரெத்தினம், கே.கோபு, எஸ்.தண்டபாணி, ஏ.கே.செல்வம், ஜெ.பாப்பம்மாள், எழுத்தாளர் மா.சண்முகம், வி.ச நகரக்குழு வி.கே.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, கே.பசுபதி, கே.கார்த்தி, ராஜேஷ், ஆர்.சதாசிவம், டி.ரவீந்தரன், சி.பாஸ்கர், கே.வீரசேகரன், டி.செல்வம், வி.வி.செந்தில்குமார் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.