tamilnadu

img

போதையற்ற தமிழ்நாடு கையெழுத்து இயக்கம்

திருத்துறைப்பூண்டி, பிப்.22- போதைக்கு எதிராக ஒரு கோடி கையெழுத்து இயக்க நிகழ்ச்சி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் பிப்ரவரி 20 அன்று ஒன்றிய செயலாளர் ஏ.கே.வேலவன், நகரச் செயலாளர் ஜி.தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது.  இயக்கத்தை நகர மன்றத் தலைவர் கவிதா பாண்டியன் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.சலாவுதீன் பேசினார். திருத்துறைப்பூண்டி காவல் ஆய்வாளர் பழனியப்பன், சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜீ.தமிழ்மணி, நகர்மன்ற துணைத் தலைவர் எம்.ஜெயபிரகாஷ், வாலிபர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் கே.பி.ஜோதிபாசு, மாவட்டத் துணைத் தலைவர் எம்.சதீஷ், காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.