திருச்சிராப்பள்ளி, நவ.14- திருச்சியில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையக்குழு உறுப்பினர் ஆர்.ஜி.ஆனந்த் செய்தியாளர்களிடம் பேசுகை யில், ‘‘கடந்த ஒருவருடமாக மாணவர்களிடையே போதைப் பொருள் பயன்படுத்துவது அதி கரித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் போதைப்பொருள் அதிகளவில் பயன்படுத்தியது தெரியவந்தது. களஆய்வு செய்ததில் ரூ12 முதல் ரூ15 விலை கொண்ட டெபண்டால் மாத்திரையை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் போதைப் பொருளாக உடலில் செலுத்தி வருவது தெரிய வந்துள்ளது’’ என அதிர்ச்சிகர மான தகவல் வெளியிட்டார். டெபண்டால் மாத்திரையை தடை செய்யக் கோரி தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரி விற்கு பரிந்துரை செய்துள்ளோம். போதைகளை உருவாக்கக் கூடிய பயன்பாட்டில் உள்ள பொருட்களை கட்டுப்படுத்து வதற்கான வழிமுறைகளை உரு வாக்கி கொண்டு இருக்கி றோம். நாகை மாவட்டத்தில் வெளிநாட்டை சேர்ந்த பெண் ணை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொலை செய்ததில் அதில் ஈடுபட்ட இளைஞர்கள் போதை பொருள் பயன்படுத்தி உள்ளனர். போதைப் பொருள் அதிகளவில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள், சிறுவர்கள் பயன்படுத்துகிறார்கள். போதைப் பொருள் விற்பனை கும்பல் இவர்களை குறி வைத்து விற்பனை செய்கிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.