tamilnadu

img

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தஞ்சாவூர் ஜூன்.2-தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பேருந்து நிலையத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நவீன சுத்திகரிப்பு இயந்திரம், சிண்டெக்ஸ் தண்ணீர் தொட்டியுடன் கூடிய  சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நிலையம் திறப்பு விழா ஞாயிற்று க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு தலைமை வகித்து, திறந்து வைத்து பேசினார். பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி முன்னிலை வகித்தார். தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் வரவேற்றார். நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலாளர்கள் துரைமாணிக்கம் (பேராவூரணி), நாடியம் சிவ.மதிவாணன்(சேதுபாவாசத்திரம்), நகரச்செயலாளர் வி.என்.பக்கிரிசாமி, முன்னாள் மாநில கயிறு வாரியத் தலைவர் எஸ்.நீலகண்டன், வர்த்தக கழகத் தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், பொருளாளர் எஸ்.ஜகுபர்அலி, மாணவர் அணி நகரச் செயலாளர் பொறியாளர் கோவி.இளங்கோ, நகர துணைச் செயலாளர் பால் ஏ.பக்கர், பேருந்து நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் கே.கான்முகமது, பேரூராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் மு.சீனிவாசன், ஆதனூர் ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்தில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.