tamilnadu

img

திருச்சியில் டிஆர்இயு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.13- தென்னக ரயில்வே சொசைட்டியின் பங்குதாரர்களின் ஈவு தொகையை உடனே வழங்க கோரி டிஆர்இயு சார்பில் திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகில் உள்ள தென்னக ரயில்வே லோன் சொசைட்டி அலு வலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.  போராட்டத்திற்கு கோட்டத் தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். போராட்டத் தில் துணை பொது செயலாளர் மனோகரன், செயல் தலைவர் ஜானகிராமன், உதவி பொது செயலாளர் மனோகரன், கோட்டத் தலைவர் மொழியன், சிஐடியு மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், மதுரை கோட்டச் செயலாளர் சங்கரநாராயணன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் கோரிக்கை களை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.