திருச்சிராப்பள்ளி, ஆக.14- ஸ்ரீரங்கம் மூலத்தோப்பு பகுதியில் புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற திறப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. புதிய மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன் றத்தை முதன்மை மாவட்ட நீதிபதி முரளிசங்கர் திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், திருச்சி மாவட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் 45,580 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் உரிமையியல் வழக்கு 29,510, குற்றவியல் வழக்கு 16,070 ஆகும். இந்த புதிய நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கம், பெட்டவாய்த்தலை, கொள்ளிடம் காவல் நிலையங்கள் மற்றும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத் திற்குட்பட்ட வழக்குகள் நடைபெறும். மேலும் இந்த புதிய நீதிமன்றத்திற்கு திருச்சி ஜேஎம்3, ஜேஎம் 4 நீதிமன்றங்க ளில் இருந்து 1200 உரிமையியல் வழக்கு கள் மற்றும் 800 குற்றவியல் வழக்கு கள் மாற்றப்பட்டுள்ளன. உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி 5 ஆண்டுகளுக்கு மேலான வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதனை உச்சநீதி மன்றம் கண்காணிக்கும் என்று கூறி யுள்ளார். தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்கின்றனர். அதேநேரம் அவசர கதியில் வழங்கப்பட்ட நீதி புதைக்கப் பட்ட நீதிக்கு சமம். விரைவான நீதி வழங்க வேண்டும். அதே சமயத்தில் தரமான நீதி வழங்க வேண்டும். நீதிபதி கள் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழி யர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என்றார். ஸ்ரீரங்கத்தில் புதிதாக தொடங்கப் பட்டுள்ள இந்த மாவட்ட உரிமை யியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் வழக்கு விசாரணை செவ் வாயன்று தொடங்கப்பட்டு விட்டது. இந்த நீதிமன்றத்திற்கு சிவகாமசுந்தரி நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னதாக மணப்பாறையில் பணியாற்றியவர் என்பது குறிப்பி டத்தக்கது. விழாவில் மாவட்ட ஆட்சியர் சிவ ராசு, திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ், திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியா வுல்ஹக் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.