tamilnadu

img

கஜா புயலால் பாதித்த களத்தூர் விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கல்

தஞ்சாவூர் ஜூன்.22- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே களத்தூர் கிராமத்தில் 660 ஹெக்டேரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்தாண்டு கஜா புயலில் 80 சதவீத தென்னைமரங்கள் அடியோடு வீழ்ந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் அந்த கிராமத்தில் உள்ள தென்னை விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.  இதையடுத்து பன்னாட்டு நிறுவனமான அக்கார் ஹோட்டல் குழுமம் ரூ.12 லட்சம் செலவில் களத்தூர் கிராமத்தில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து அதில் ஏக்கருக்கு 70 தென்னங்கன்று வீதம் 91 ஏக்கருக்கு 91 விவசாயிகளுக்கு 6,370 தென்னங்கன்று, ஓராண்டுக்கு அந்த கன்றுகளை பராமரிக்க தேவைப்படும் உயிர் உரங்களையும் வழங்கினர்.  நிகழ்ச்சியில் அக்கார் ஹோட்டல் குழுமத்தின் பொது மேலாளர் வேணுகோபால், மனிதவள மேம்பாட்டு மேலாளர் ஆர்.சேதுமாதவன், ஹோப் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல் அலுவலர் மலர்விழி பிரபாத், காவிரி டெல்டா உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.பன்னீர் செல்வம், இயக்குநர்கள் வி.கலியமூர்த்தி, கே.ஆர்.கோவிந்தராஜன், வழக்கறிஞர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்