tamilnadu

img

முறையான பதிவின்றி பணியாற்றிய ஒடிசா தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

தஞ்சாவூர்:தேசிய சட்டப்பணிகள் ஆணையத்தின் பரிந்துரைப்படி ஏற்படுத்தப்பட்ட மாவட்ட அளவிலான குழுவினர் (மனித கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒன் ஸ்டாப் கிரிசிஸ் டீம்) மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலர் மற்றும் சார்பு நீதிபதி பி.சுதா தலைமையிலான குழுவினர் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே சாத்தனூர் கிராமத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகள் மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கின்றனரா என புதன்கிழமை ஆய்வு செய்தனர். இதில், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 14 ஆண்கள், 2 பெண்கள் என மொத்தம் 16 தொழிலாளர்கள் புலம்பெயர் தொழிலாளர் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாமல், சட்டத்துக்குப் புறம்பாக பணியில் அமர்த்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, 16 பேரும் மீட்கப்பட்டு, தஞ்சாவூர் கோட்டாட்சியர் எம். வேலுமணி முன் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டு பிறகு 16 பேரும் அவர்களின் சொந்த ஊருக்கு ஒடிசா மாநிலத்துக்கு வியாழக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.