கரூர், ஜூன் 9- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், கடவூர், குளித்தலை ஆகிய வட்டத்தில் உள்ள கருவூலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் எம்.சுப்பிரமணியன் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார். மாவட்ட செயலாளர் கே.சக்திவேல், மாவட்ட தலைவர் எம்.மகாவிஷ்ணன், பொருளாளர் பொன் ஜெயராம் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் செல்வராணி, சுரேஷ்குமார், செல்வம், கண்ணன், தங்கபாண்டியன், பிரேம், பாண்டிக் கண்ணன், பாலசுப்பிரமணியன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
நாகப்பட்டினம்
அரசு ஊழியர் சங்க நாகை வட்டம் சார்பில் நாகப்பட்டினம் சார்கருவூலம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் துணைத் தலைவர் சி.வாசு தலைமை வகித்தார். வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன், கருவூலக் கணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் ராஜவேல், தமிழ்நாடு பள்ளிக் கல்லூரி ஓய்வுபெற்ற ஆசிரியர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வி.பாலசுப்பிரமணியன் ஆகியோர் உரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.டி.அன்பழகன் நிறைவுரையாற்றினார். வட்டப் பொருளாளர் சி.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். இதே போல் மயிலாடுதுறை, வேதாரணி யம், கீழ்வேளூர், குத்தாலம் உள்ளிட்ட இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.