tamilnadu

img

விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதை நிறுத்தக் கோரி துவாக்குடியில் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மே 14-விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய் பதிப்பதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கதிருவெறும்பூர் தாலுகா குழு சார்பில் செவ்வாய் அன்று துவாக்குடி பேருந்துநிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு பன்னீர் செல்வம் தலைமை வகித்தார். தர்மராஜ், தண்டாயுதபாணி, தங்கமணி, நடராஜன், மாரீசன், மனோகர், ஜோசப், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணை செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் சிதம்பரம், பொருளாளர் ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் திருவெறும் பூர் தாலுகா செயலாளர் நடராஜன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வி.ச.செயலாளர் குருநாதன், தலைவர் கணேசன், பொருளாளர் சங்கிலிமுத்து, வி.தொ.ச.செயலாளர் முருகேசன் மற்றும் வட்டக்குழு உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.