திருச்சிராப்பள்ளி, மார்ச் 5- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் தி௫ச்சி மாவட்டம் லால்குடி, மண்ணச்சநல்லூர், ஸ்ரீரங்கம், அரியலூர் மாவட்டம் தி௫மானூர், தா.பழூர் வட்டங்களை இணைக்க வேண்டும். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்துப் போரா டியவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் உள்படப் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தித் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புதனன்று லால்குடியில் கண்டனஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஒன்றியச் செயலாளர் பாலு தலைமை தாங்கினார். சங்க மாநிலத் துணைத் தலைவர் கே.முகமது அலி, தவிச திருச்சி புற நகர் மாவட்டச் செயலாளர் சிதம்பரம், விதொச மாவட்டத் தலைவர் சந்திரன், விதொச மாவட்ட நிர்வாகி சுப்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநகர் மாவட்டச் செயலாளர் பாண்டியன் ஆகியோர் பேசினர். முரு கேசன், பாலா, ஆண்டனி திலக் மணிகண்டன், உதயா, முத்துசாமி, மணி ராமச்சந்திரன், சீத்தாராமன், சப்தரிஷி, செம்பரை செல்வராஜ், கூகூர் கணேசன், ராமர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.