tamilnadu

img

ஆர்ப்பரித்த தோழர் ‘ஆழி!’

அந்த அன்புத் தோழரை, “ஆழி” என்றுதான் அனை வரும் பாசமுடன் அழைப்போம். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களி லும், வெகுஜன இயக்கங்கள், தோழ மைச் சங்கங்களின் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் பங்கேற்று, ஒலி வாங்கிக்கு முன்னால் நின்று, அவர் சிங்கம்போல் கர்ஜிப்பார். கருத்துப் பொழிவைக் கடல் அலைபோல் ஆர்ப்ப ரித்து, அனைவரையும் ஈர்ப்பார். அத னால் மட்டுமல்ல அவர் ‘ஆழி’… காட்டுமன்னார்குடி அவரது பூர்வீகம். முதுகலை தமிழ் பயின்று, நாகை மாவட்டத்தில் கீழ்வேளூருக்கு அருகில் உள்ள ஆழியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராய் நீண்டகாலம் பணியாற்றி னார். ஆழியூரில் அவர் பணியாற்றிய காலத்தில் பள்ளி வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்; மாணவர்களோடும் ஊர் மக்களோடும் அன்புடன் பழகி, நடு நிலைப் பள்ளியை அரசு உயர்நிலைப் பள்ளியாக உயர்வடைவதற்குக் கார ணமாகத் திகழ்ந்தார். எனவேதான், இராம. அரங்கராஜன் என்னும் அவர் பெயரோடு ஆழியூர் என்னும் பெயர் சுருங்கி, ‘ஆழி’யாகி, பிறகு அவர் பெயர் ஆழி இராம அரங்கராஜன் ஆகி யது. அதன்பிறகு சுருக்கமாக அவர் ‘ஆழி’ யானார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் நீண்டகால உறுப்பினர் அவர். பல நண் பர்களிடம் மார்க்சியம் பேசிக் கட்சியில் பலரை இணைத்துள்ளார். தமிழ கத்தில் ‘அறிவொளி’ இயக்கம் பிரகா சித்த போது,  அறிவொளி இயக்கத்தின் நாகை மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பேற்று, அப்போது, நாகை சட்ட மன்ற உறுப்பினராக இருந்த தோழர் கோ.வீரய்யனோடு இணைந்து, அவ ரது வழிகாட்டுதலில் பல சாதனை களைச் செய்தவர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளராக ஆழி இருந்த போது அந்த இயக்கம் நாகை மாவட் டத்தில் மிகுந்த வளர்ச்சி பெற்றது. பள்ளிகளில் ‘துளிர்’ வினா-விடைப் போட்டிகளை நடத்தினார். மாண வர்க்கான அறிவியல் இயக்கத்தின் துளிர் இதழ்கள் எப்போதும் அவரது ஜோல்னா பையில் இருந்து கொண்டே யிருக்கும். 1984-ல், எம்.ஜி.ஆர். ஆட்சியில், ஆசிரியர் இயக்கங்களெல்லாம் ஒன்றி ணைந்து’ஜாக்டீ’ என்னும் அமைப்பில் மத்திய அரசுக்கு இணையான ஊதி யம் கேட்டுப் போராடியபோது கைது செய்யப்பட்டுத் திருச்சி மத்தியச் சிறையில் 29 நாட்கள் நூற்றுக் கணக் கான ஆசிரியர்களோடு சிறையிருந்த வர். 1988-ல் ஆசிரியர் இயக்கங்களோடு அரசு ஊழியர் இயக்கங்கள் ஒன்றி ணைந்து ‘ஜாக்டீ-ஜியோ’ என்றாகி, பல நாட்கள் நடைபெற்ற வீரியமிக்க போராட்டங்களில் முன்னணிப் படை வீரராக நின்று ஆர்ப்பரிப்பார். அது போல், 2003-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில்  நடந்த ஜாக்டோ-ஜியோ போராட்டத்திலும் முன்னனி வீரராய்ப் போராட்டங்களில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதாவால் பிறப்பிக்கப்பட்ட ‘டெஸ்மா’ சட்டத்தில் வேலை இழந்து பின் வேலை பெற்றார். அப்போது அவர் அக்கரைப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியாராகப் பணி யாற்றினார்.

தமிழகத் தமிழாசிழாசிரியர் கழ கத்தில் பல முக்கியப் பொறுப்புகள் வகித்துப் பல தமிழாசிரியர்களை மார்க்சியத்தின்பால் ஈடுபாடு கொள்ளச் செய்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகைக் கிளைத் தலைவராகவும் துணைப் பொறுப்புகளில் இருந்தும் பல கலை இலக்கிய இரவுகளை நடத்துவதற்கு ஒத்துழைப்பைத் தந்தவர். நாடகக் கலைஞர் நாகையில் ‘தென்றல் பைன் ஆர்ட்ஸ்’ என்னும் நாடகக் குழுவை நடத்தி, அதன் இயக்குநராகத் திகழ்ப வர் ,நாகைத் தொழில் அதிபர் டாக்டர் பி.என்.குப்புசாமி. அவரது நாடகக் குழு வில் பல நாடகங்களில் குணச் சித்திரப் பாத்திரங்களில் நடித்துப் புகழ்பெற்ற வர் ஆழி. சிறந்த குணச் சித்திர நடி கருக்காக, சென்னைத் தமிழிசை நாடக மன்றத்தின் அப்போதையத் தலைவ ராக இருந்த நடிகர் ராதாரவியிடம் இரு முறை பரிசு பெற்றவர். ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வு பெற்றபின், தமிழ்நாடு அனைத்து ஓய்வூ தியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவராக ஓய்வில்லாமல் பணி யாற்றினார். தஞ்சையில் ஊராட்சி ஒன்றிய ஆணையாராகப் பணியாற் றிய அவரது சகோதரர் இறந்தபிறகு, அந்தக் குடும்பத்திற்கு ஆதரவாகத் தஞ்சைக்குக் குடியேறினார். இவருக்கு வயது-71. துணைவியாரும், இரு மகள் களும் ஒரு மகனும் உள்ளனர்.

சிறந்த கவிஞர், இசைப் பாடல்கள் நிறைய எழுதி அவரே கம்பீரக் குர லில் பாடுவார். இப்படிப் பன்முக ஆற்றல் பெற்ற ஆழியின் அந்த ஆர்ப்பரிப்பு அடங்கிப் போனது. உடல்நலக் குறைவால், சென்னையில் ஜூலை 2 செவ்வா யன்று அன்று காலை 8 மணிக்குக் காலமானார்.அவரது உடல், தஞ்சை மருத்துவக் கல்லூரிச் சாலையில் உள்ள 67, ஏ.ஆர்.எஸ். கூட்டுறவுக் கால னியில் அவரது இல்லத்திற்குக் கொண் டுவரப்பட்டது. செங்கொடி இயக்கத்தின் ஏராள மான தலைவர்களும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் பல ரும் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த, அவரது இறுதி ஊர்வலம், புதனன்று மாலை 5 மணிக்கு அவரது இல்லத்திலிருந்து புறப்பட்டது. ஆர்ப்பரித்த அந்த ஓங்கார ஓசை அடங்கி விட்டாலும், ஆழியின் அலை யோசை எப்போதும் அடங்கிவிடாது அல்லவா? ஆழி இராம அரங்கராஜ னின் அந்தக் குரலும் பாடலும் நம் நெஞ்சில் என்றும் ஆர்ப்பரித்துக் கொண்டே இருக்கும்.

-ந.காவியன்