திருச்சிராப்பள்ளி, ஆக.26- தொலை தொடர்புத்து றையில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்க ளுக்கு கடந்த 11 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனே வழங்க வேண்டும். ஆட்குறைப்பு செய்வதை கைவிட வே ண்டும். பிடித்தம் செய்த இபி எப், இஎஸ்ஐ தொகையை கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தொலை தொடர்புத்துறை ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் பிஎஸ்என்எல் திரு ச்சி மண்டல பொதுமேலாளர் அலுவலக வளாத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டம் புதனன்று இர ண்டாவது நாளாக நடை பெற்றது. பிஎஸ்என்எல்இயு மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார். போ ராட்டத்தை விளக்கி பிஎஸ்என்எல்இயு மாவட்ட செயலாளர் அஸ்லம்பாஷா, தமிழ்நாடு தொலை தொ டர்புத்துறை ஒப்பந்த தொழி லாளர் சங்க மாவட்ட செயலா ளர் முபாரக்அலி, மாவட்ட உதவி செயலாளர் குமார், மா வட்ட உதவி தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் பேசினர்.