tamilnadu

img

பணப் பயன்களை வழங்கக் கோரி தோல்ஷாப் தொழிலாளர் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன் 22-  திருச்சி செம்பட்டு பகுதி யில் 2 ஆண்டுகளாக மூடியி ருக்கும் சேலத்தார் தோல் ஷாப்பை திறக்க வேண்டும். அங்கு பணியாற்றிய 55 தொ ழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பயன்களை உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தோல்ஷாப் தொழிலாளர் சங்கம் சிஐடியு சார்பில் திங்களன்று சேலத்தார் தோல் ஷாப் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு ஒருங்கிணைப்பாளர் விஜயேந்திரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்க ராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயபால், பொன்மலை பகுதி செயலாளர் கார்த்தி கேயன், துப்புரவு சங்க மாவட்டச் செயலாளர் மாறன் ஆகியோர் பேசினர். டிஆர் இயு ராஜா, இந்திய மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் மோகன், போக்குவரத்து சங்க மணிமாறன், ஆட்டோ சங்க ராஜலிங்கம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். 

;