திருச்சிராப்பள்ளி, மே 29-7-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும். அரியர்ஸ் வழங்க வேண்டும். ஓய்வூதியம்ரூ.2000, பணிக்கொடை ரூ.50,000வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளாட்சித்துறை ஊழியர்சங்கம், மேல்நிலை நீர்தேக்க தொட்டிஆபரேட்டர்கள் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாயன்று மருங்காபுரி ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ராமசாமி தலைமை வகித்தார். சிஐடியு புறநகர்மாவட்டச் செயலாளர் சிவராஜன்,மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம்,சங்கத் தலைவர் பழனிவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மருங்காபுரி வட்டச் செயலாளர் தியாகராஜன், சிஐடியு நிர்வாகி அழகர்சாமி ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை விளக்கி பேசினர்.