பணியை தடுத்து நிறுத்தக் கோரி சிபிஎம் மனு
மன்னார்குடி, ஆக.7- பொது மக்களுக்கு பயன்படாத நில த்தடி நீரின் இயற்கையான செறி வூட்டையும் உருவாக்காத நகரின் மைய ப்பகுதியில் பயனில்லாத குளத்தை வெட்டும் பணியை நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இதை உடனே கைவிட வேண்டும் எனவும் வாய்க்கால் வடிகால் இல்லாத குளம் எதிர்காலத்தில் கழிவுகளின் குட்டையாக மாறி சுற்றியிருக்கும் மிக நெருக்கமான குடியிருப்புகளின் ஆழ்கு ழாய் கிணறுகளையும் நிலத்தடி நீரையும் கெடுத்து விஷமாக்கும் என தாங்கள் அஞ்சுவதால் இக்குளம் வெட்டும் பணி உடனே நிறுத்தப்பட வேண்டும் என வும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மன்னார்குடி நகரக் குழு மன்னார்குடி வருவாய் கோட்டாட்சியரிடம் கோ ரிக்கை மனு அளித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மன்னார்குடி நகரச் செயலாளர் எஸ்.ஆறுமுகம் செய்தியாளர்களிடம் கூறுகையில், மன்னார்குடி பேருந்து நிலையத்திற்கு பக்கத்தில் உள்ள உழவர் சந்தைக்கு பின்புறம் காலித்திடலாக இருந்த இட த்தில் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு குளம் இருந்திருக்கிறது. பின்னர் அது தூர்க்கப்பட்டு சென்ற ஆண்டு வரை திடலாக இருந்தது. இந்த இடத்தை டெல்டா மாவட்டங்களில் முத ன்மை உழவர் சந்தையாக செயல்பட்டு வரும் மன்னார்குடி உழவர் சந்தையின் விரிவாக்கத்திற்கு பயன்படுத்திக் கொ ள்ள நகராட்சி நிர்வாகமும் தமிழ்நாடு மார்க்கெட்டிங் கமிட்டியும் இணைந்து முன்முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் நகரக்குழு 2014 ஆம் ஆண்டு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்த இடத்தில்தான் ஒரு குளத்தை உருவாக்க சுமார் 100 அடி நீளம், 40 அடி அகலம், 40 அடிஆழத்தில் பெரும் பள்ளம் மன்னார்குடி நகராட்சியால் வெட்டப்பட்டு வருகிறது. இந்த இட த்தில் குளம் வெட்ட மன்னார்குடி நகரா ட்சி துவங்கியிருப்பது தேவையற்றது. பயனில்லாதது. உருவாக்கப்படும் அந்த குளத்திற்கு வாய்க்கால் வடிகால் இல்லாத நிலையில் காலப்போக்கில் அடி ஆழத்தில் குட்டையாக சுருங்கி கொசு உற்பத்தியாகும் நிலை உருவாகும். சுற்றியுள்ள வீடுகள் வணிக நிறுவ னங்களின் கைவிடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், காய்கறி, காகிதம், துணி, மாமிச கழிவுகள் கொட்டப்பட்டு அவை கள் தேங்கி அழுகி சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் நிலை உருவா கும் என அஞ்சுகிறோம். மேலும் குளத்தி ற்கான பள்ளம் மிக ஆழமாக வெட்ட ப்பட்டுள்ளதால் இது அருகாமையில் உள்ள ஏராளமான குடியிருப்பு ஆழ்கு ழாய் கிணறுகளின் நிலத்தடி நீரூற்றை யும் மாசுபடுத்தி நஞ்சாக்கும் எனவும் கரு துகிறோம். எனவே இந்த குளம் வெட்டு பணி நிறுத்தப்பட வேண்டும். டெல்டா மாவட்டங்களிலேயே மிக சிறந்த முதன்மை சந்தையாக செயல்பட்டு வரும் மன்னார்குடி உழவர் சந்தையில் தண்ணீர் வசதிக்கு ஆழ்குழாய் கிணறு, கழிப்பறை, உணவறை, ஆவின் கேண்டீன், குளிர் சாதனை அறை உரு வாக்குவதற்கு இடமின்றி உள்ளது. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வரும் சிறு வணிகர்கள் நகர மக்கள் நாட்டுக் காய்கறிகளை விளைவிக்கும் விவசாயிகளுக்கு மன்னார்குடி உழவர் சந்தை வாழ்விற்கான ஆதாரமாக உள்ளது. இச்சந்தையின் விரிவாக்க பயன்பாட்டிற்கு வெட்டப்பட்டு வரும் குளத்திற்கு அருகில் உள்ள காலியி டத்தையும் குளத்தின் கீழ்பகுதியையும் பயன்படுத்திக் கொள்ளவதுதான் மிகச்சி றந்த பொதுப் பயன்பாடாக இருக்கும் என உறுதியாக கருதுகிறோம். மன்னார்குடி வருவாய் கோட்டாட்சி யர் இதற்கான நடவடிக்கைகளை எடுக்க வும் இந்த குளம் வெட்டு பணி உடனே நிறு த்தப்பட வேண்டும் எனவும் வியாழ னன்று கோட்டாட்சியரை சந்தித்து மனு கொடுத்துள்ளோம் என்றார்.