tamilnadu

திருவாரூர், மன்னார்குடியில் மின்தடை

மன்னார்குடி, செப்.20- திருவாரூர் மற்றும் மன்னார்குடி பகுதியில் வரும் 21-ம் தேதி மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர்கள் தெரிவித்துள்ளார்.  திருவாரூர் துணை மின்நிலையத்தில் 21-ம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் திருவாரூர் நகர், விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூர், முகந்தனூர், திருப்பயத்தாங்குடி, மாவூர், அடியக்கமங்கலம், இபி காலனி, பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூர், புதுப்பத்தூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என திருவாரூர் மின்வாரிய உதிவி  செயற்பொறியாளர் எஸ்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.  மேலும் மன்னார்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால்  மன்னார்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூர், காணூர், நாவல்பூண்டி, கோரையாறு, கர்ணாவூர், கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.சம்பத் தெரிவித்துள்ளார்.