திருச்சிராப்பள்ளி: திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஒன்றியம் பெருகமணி ஊராட்சி 9 ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்புக்கு போட்டி யிட்ட அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக் குழு உறுப்பினர் வி.சீனிவாசன் வெற்றி பெற்றார். இதற்கான சான்றை அந்தநல்லூர் வட்டார வளர்ச்சி அலு வலர் சீனிவாசன் வழங்கினார். மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாஸ்கர், நட ராஜன், மணிகண்டன், நாராயணன் ஆகியோர் உடனிருந்தனர். பேரூர் ஊராட்சி 3 வது வார்டு உறுப்பி னர் பொறுப்புக்கு போட்டியிட்ட அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க திருச்சி மாநகர் மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வமணி வெற்றி பெற்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செல்வ ராஜ், பாண்டியராஜா, நீலமேகம், ரெங்கராஜ், சேட்டு ஆகியோர் உடனிருந்தனர்.