tamilnadu

img

சிபிஎம் சிறப்புப் பேரவை

தஞ்சாவூர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை கணபதி நகர்,  மாவட்டக்குழு அலுவலகத்தில், சிறப்பு பேரவை கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பேரவைக்கு மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார். மத்தியக்குழு, மாநிலக்குழு முடிவுகளை விளக்கி, மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  நிகழ்வில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வெ.ஜீவகுமார், எம்.மாலதி, என்.வி.கண்ணன், எஸ்.தமிழ்ச்செல்வி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.அபிமன்னன், எம்.பழனி அய்யா, எம்.ராம், ஆர்.கலைச்செல்வி, சரவணன், மாநகரச் செயலாளர் என்.குருசாமி, இடைக்கமிட்டி செயலாளர்கள் பூதலூர் வடக்கு கே.காந்தி, பூதலூர் தெற்கு சி.பாஸ்கர், அம்மா பேட்டை ஏ.நம்பிராஜன், திருவையாறு ஏ.ராஜா உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார் நன்றி கூறினார்.