tamilnadu

img

மணப்பாறையில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜூன்19- திருச்சி மாவட்டம் மணப் பாறை நகராட்சி 1வது வார்டு விடத்தாலம்பட்டியில் மலைப்பகுதியான காந்தி சாலை முதல் டி.உடையாப் பட்டி வரை நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும். காந்திசிலை முதல் டி.உடையான்பட்டி வரை உள்ள பிரிவு சாலை மற்றும் வெள்ளக்கல் சாலை யை சரி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதனன்று நகராட்சி அலுவலகம் முன் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டக் குழு உறுப்பினர் சீனி வாசன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி புற நகர் மாவட்ட செயலாளர் ஜெயசீலன், வட்டச் செயலா ளர் ராஜகோபால் ஆகி யோர் பேசினர். வட்டக்குழு உறுப்பினர்கள் கோபால கிருஷ்ணன், பாலு, ஷாஜ கான், கண்ணன், சரஸ்வதி, ராஜாமணி, சுரேஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஒன்றியக்குழு உறுப்பினர் நடேசன் நன்றி கூறினார்.