tamilnadu

img

குடிநீர் பற்றாக்குறையை போக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அறந்தாங்கி, மார்ச் 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் தினையாகுடி கடைவீதியில் பல் வேறு கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா குழு உறுப்பினர் க. சாத்தை யா தலைமை வகித்தார். சி.ரெத்தி னம், மு.கருப்பையா, ச.மாயழகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சியின் மாவட்டச் செயலா ளர் எஸ்.கவிவர்மன் ஆர்ப்பாட்டத் தை துவக்கி வைத்து பேசினார். நீர் விளங்குளம் வட்டம் கிராம நிர்வாக அலுவலர் மறுக்காமல் ஜாமின் சான்று வழங்க வேண்டும். திரு நெல்லிவயல்- மாவிளங்காவயல் பழுதடைந்த சாலையை செப்பனிட்டு பாலம் அமைக்க வேண்டும். திருநெல்லிவயல் கடைவீதியில் பொதுகழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.  அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக் கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். கட்சி மாநில குழு உறுப்பினர் ஜ.வி.நாகரா ஜன், தாலுகா செயலாளர் தென்றல் கருப்பையா, தமுஎகச, மாவட்ட துணை செயலாளர் கவிபாலா, விவ சாய சங்க துணைத் தலைவர் மேக வர்ன்ம, சிபிஎம் தாலுகா குழு உறுப்பி னர்கள் ஏ.கணேசன், வி.ராசு, தர்ம ராஜ், லவக்குமார், உள்பட திரளா னோர் கலந்து கொண்டனர்.