tamilnadu

img

நாகை மாவட்டத்தில் சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை

தரங்கம்பாடி, ஜூன் 19- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் டி. மணல்மேட்டில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் நிகழ்ச்சி வட்ட செயலாளர் பி.சீனி வாசன் தலைமையில் புதனன்று நடை பெற்றது. மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முரு கையன் கட்சி உறுப்பினர்களின் பணிகள் குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும் உரை யாற்றினார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் சிம்சன், கலைச்செல்வி, இராசையன், ரவிச்சந்திரன், முன்னாள் வட்ட செயலாளர் கோவிந்தசாமி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர் 

கட்சியின் கீழ்வேளூரில் ஒன்றியப் பேர வைக் கூட்டம் நடைபெற்றது. பேரவைக்கு ஒன்றியப் பொறுப்புச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து சிறப்புரை யாற்றி உறுப்பினர்களுக்குக் கட்சி ரசீது வழங்கினார். மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஜி.ஜெயராமன், மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.என்.அம்பிகாபதி, எம்.சாந்தி, எம்.செல்வராஜ், ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, ஏ.சிவகுமார், மோகன் இங்கர்சால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கட்சியின் நாகை ஒன்றியப் பேரவைக் கூட்டம் சிக்கலில் நடைபெற்றது. பேர வைக்கு ஒன்றியச் செயலாளர் பி.டி.பகு தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பி னர் ஏ.வி.முருகையன், சிறப்புரையாற்றி உறுப்பினர்களுக்குக் கட்சி ரசீது வழங்கி னார்.  மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.கே. ராஜேந்திரன், எம்.சுப்பிரமணியன், கே. செந்தில்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் எஸ்.என்.ஜீவா ராமன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் என்.வடிவேல், வி.வி.ராஜா, பி.எம்.நன்மாறன், மாரிமுத்து, ஏ.வடிவேல், ஏ.கே.குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

சீர்காழி கொள்ளிடம் முக்கூட்டில் கட்சி யின் வட்ட செயலாளர் வி.எஸ்.தமிழ்வேந் தன் தலைமையில் கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.துரை ராஜ், சி.வி.ஆர்.ஜீவானந்தம், வட்டகுழு உறுப்பினர்கள் கே.நாகையா, சி.ராஜேந்தி ரன், ஆர்.நீலமேகம், கே.கேசவன், பி.விஜய் ஆர்.இந்திராகாந்தி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.