தஞ்சாவூர், ஜூன் 11- தமிழக மக்கள், விவசாயிகள் எதிர்ப்பை மீறி ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வருவதைக் கண்டித்தும், ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ், விவசாய நிலங்களில் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் முயற்சி போன்ற நாசகாரத் திட்டங்களை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் மாவட் டத்தில் பல்வேறு இடங்களில் இரு சக்கர வாகனப் பிரச்சாரம் தொடங்கி நடைபெற்றது. தஞ்சாவூர் ஒன்றியத்தில் பிரச்சா ரத்துக்கு சிபிஎம் ஒன்றியச் செய லாளர் எம்.மாலதி தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே. அபிமன்னன், எஸ்.ஞானமாணிக் கம், ஏ.கருப்புசாமி, பி.சங்கிலி முத்து, முத்துச்சாமி, ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர். வல்லம், திருமலைசமுத்திரம், அய்யாசாமி பட்டி உள்ளிட்ட 11 இடங்களில் மக் களை சந்தித்து ஹைட்ரோ கார்பன் திட்ட பாதிப்புகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. பட்டுக்கோட்டை ஒன்றியத்தில் கொண்டிக்குளம் உள்ளிட்ட 19 க்கும் மேற்பட்ட இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பட்டுக் கோட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில் நடை பெற்ற பிரச்சார இயக்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.செல்வம், என்.சிவகுரு பேசினர். முருக.சரவணன், மோரிஸ் அண் ணாதுரை, கே.பாண்டியன், தமிழ்ச் செல்வன், வீரப்பன், ஆரோக்கிய சாமி, செல்வராஜ், பாலு கலந்து கொண்டனர்
பாபநாசம்
பாபநாசம் ஒன்றியம் தேவ ராயன்பேட்டை, வழுத்தூர் உள் ளிட்ட இடங்களில் பிரச்சார இயக்கம் பாபநாசம் ஒன்றியச் செயலாளர் பி.எம்.காதர் உசேன் தலைமையில் நடைபெற்றது. மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோக ரன், நூறு நாள் வேலைத் திட்ட தொழி லாளர்களிடம், ஹைட்ரோகார்பன் திட்ட பாதிப்புகள் குறித்து விளக்கிப் பேசினார். உமாபதி, சேக் அலாவு தீன், நூர்தீன், முகமது அலி கலந்து கொண்டனர். சேதுபாவாசத்திரம் ஒன்றியம் பூக்கொல்லை, மணக்காடு உள் ளிட்ட பல்வேறு இடங்களில் பிரச் சார இயக்கம் நடைபெற்றது. சேது பாவாசத்திரம் ஒன்றியச் செயலா ளர் ஆர்.எஸ்.வேலுச்சாமி தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பி னர் வழக்கறிஞர் வீ.கருப்பையா முன்னிலை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி. பழனிவேலு பேசினார். குத்புதீன், பெரியண்ணன், இளங்கோவன் கலந்து கொண்டனர்.
குடவாசல்
திருவாரூர் மாவட்டம் குட வாசல் வடக்கு ஒன்றியத்தில் கட்சி யின் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.அன்பழகன் தலைமையில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.கலைமணி பிரச்சாரப் பய ணத்தை துவக்கி வைத்தார். பிரச்சா ரப் பயணம் வடமட்டம், தென்கரை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தொடர்ந்து எரவாஞ்சேரி கடை வீதியில் நிறைவுற்றது. ஒன்றிய குழு உறுப்பினர்கள் சந்திரகாசன், ரவிச்சந்திரன், மணிக்கண்ணன், முத்தலிப்பு, ராஜேந்திரன் உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கொள்ளிடம் பகுதி
நாகை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் பேரணி வட்ட செயலா ளர் வி.எஸ்.தமிழ்வேந்தன் தலை மையில் நடைபெற்றது. பேரணி, கொள்ளிடம் புலிஸ்வரி அம்மன் கோயிலிலிருந்து புறப்பட்டு கொள்ளிடம் கடைவீதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று திருமுல்லை வாசலில் நிறைவடைந்தது. மாவட்ட செயற்குழு உறுப்பின ரும் விவசாயிள் சங்க மாவட்ட செய லாளருமான எஸ்.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவா னந்தம் ஆகியோர் உரையாற்றினர். வட்டக்குழு உறுப்பினர்கள் கே. நாகையா, சி.ராஜேந்திரன், ஆர்.நீல மேகம், பி.விஜய், எல்ஐசி ஊழியர் சங்க தஞ்சை கோட்ட தலைவர் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண் டனர்.