tamilnadu

img

மாட்டு வண்டி மணல் ரீச் மீண்டும் மூடப்படும் சூழல் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம்

திருச்சிராப்பள்ளி, மே 26- திருச்சி மாவட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மணல் மாட்டு வண்டி தொழி லாளர்கள் நீண்ட காலமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்று பகுதிகளில் மணல் எடுத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை யொட்டி மணல் மாட்டு வண்டி ரீச் மூடப் பட்டது. இதனால் மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டனர். மேலும் மாடு களுக்கு தீவனம் கூட வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.  இதையடுத்து திருச்சி மாவட்ட மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் மாவட்ட செயலாளர் சேகர், மாவட்ட தலைவர் ஜி.கே.ராமர், சிஐடியு புறநகர் மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் ஆகி யோர் மாவட்ட ஆட்சியரிடம் மணல் மாட்டு வண்டி ரீச்சை திறக்கக் கோரி கடந்த 15-ஆம் தேதி மனு கொடுத்தனர். அதனை தொடர்ந்து ஆட்சியரின் உத்தரவின் பேரில் திருவளர்சோலை பகுதியில் செவ்வாய் அன்று மணல் மாட்டு வண்டி ரீச் திறக்கப்பட்டது.

கொள்ளிடம் ஆற்றில்
இதுகுறித்து மணல் மாட்டு வண்டி தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கே.ராமர் கூறியதாவது: மணல் மாட்டு வண்டி தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று மணல் ரீச் திறக்க நடவடிக்கை எடுத்த ஆட்சியருக்கு நன்றி தெரிவித்து கொள்கி றோம். ஆனால் வரும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவதால் காவிரி ஆற்றில் தற்போது திறந்துள்ள ரீச் மீண்டும் மூடப்படும். இதனால் தொழிலா ளர்கள் மீண்டும் வேலை இழக்கும் நிலை உள்ளது.  எனவே பொதுப்பணித் துறையினர் பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொண்டபடி கொள்ளிடம் ஆற்றில் மாதவபெருமாள் கோவில், கூகூர், தாளக்குடி ஆகிய இடங்க ளில் மணல் மாட்டு வண்டி ரீச் திறக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.