திருச்சிராப்பள்ளி, மே 16- பத்தாம் வகுப்பு பொதுதேர்வு மற்றும் மற்றும் தள்ளி வைக்கப்பட்ட பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளை கொரோனா அச்சம் போக்கி கால அவகாசத்தோடு தேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனிக்கிழமை அன்று திருச்சி பொன்மலை ஆர்மரிகேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மோகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் துளசி, பள்ளி மாணவர் உபக்குழு மாவட்ட கன்வீனர் ஹரிபிரசாத் கலந்து கொண்டனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் அவரவர் வீட்டின் முன் கோரிக்கை அட்டைகளை ஏந்தி கோஷமிட்டு போராட்டம் நடத்தினர். பொன்னமராவதி இதே போல் புதுக்கோட்டை பொன்னமராவதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் சேக் முகமது தலைமையில் இந்திரா நகரில் நடைபெற்றது. மிகம்மது இஸ்மாயில், மன்சூர் அலிகான், நூருல் அமீன் உள்ளிட்டோரும், நாட்டுக்கல் கிளையில் நடைபெற்ற போராட்டத்தில் நாட்டுகல் கிளை தலைவர் ஆரிப் தலைமை வகித்தார். கிளை பொருளாளர் அக்பர் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.