tamilnadu

img

தோழர் வி.பி.சிந்தன் நினைவு தின நிகழ்ச்சி

நாகப்பட்டினம், மே 9-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர்களுள் ஒருவரும் உழைப்பாளர் வர்க்கத்தின் ஒப்பற்ற தோழருமாகிய வி.பி.சிந்தன் நினைவு தின நிகழ்ச்சி புதன்கிழமை சி.பி.எம். மாவட்டக் குழு அலுவலகமான ’வெண்மணி தியாகிகள் நினைவு இல்லத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு சி.பி.எம்.நாகை நகரச் செயலாளர் எம்.பெரியசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினரும் சட்டமன்ற முன்னாள்உறுப்பினருமான வி.மாரிமுத்து, தோழர் வி.பி.சிந்தன் உருவப்படத் திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், வி.பி.சி.யின் அரிய சாதனைகளை நினைவு கூர்ந்து புகழுரையாற்றினார். நாகை ஒன்றிச் செயலாளர் பி.டி.பகு,மாவட்டக்குழு உறுப்பினர் ப.சுபாஷ்சந்திரபோஸ், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா மற்றும் வி.வி.ராஜா, கா.காந்திநேசன் உள் ளிட்டோர் பங்கேற்றனர்.

;